சமீபத்தில் பள்ளி மாணவர்கள் மீதான பாலியல் அத்துமீறர்கள் தொடர்ந்து வெளியாகிவரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை உயர் அலுவலர்கள், மாநில குழந்தைகள் ஆணையம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் நடத்தை விதிகளில் திருத்தம் மேற்கொள்ளலாம் கடும் நடவடிக்கை எடுப்பதற்கு வகை செய்யும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ள, வரைவு அறிக்கை தயாரிக்கப்படுவதாகவும் மூன்று- நான்கு நாட்களில் வரைவு அறிக்கை வெளியிடப்படும் என்றும் சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதனை தெரிவித்தார்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, பாலியல் புகார் வந்தால் உடனே நேரடி ஆய்வுக்கு செல்ல வேண்டும். பாலியல் புகார் குறித்து உடனடியாக தலைமைக்கு தெரிவிக்க வேண்டும். பாலியல் புகார்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பாலியல் புகார்களை முறையாக விசாரிக்க தவறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற வகையில் கருத்துக்களை பரப்பி அரசியல் செய்ய முயற்சி செய்கிறார்கள் அதற்கு இடம் கொடுக்காத வகையில் செயல்பட வேண்டும். துன்புறுத்தல்கள் குறித்து மாணவர்கள் புகார் அளிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட அளவிலேயே பள்ளிகளில் வரும் போக்சோ புகார்களை முன்னுரிமை கொண்டு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி அளவில் பிரச்சினைகள் வரும் போதே அதனை சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும், என பேசினார். மேலும், போக்சோ வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு, வேறு எங்கும் பணியாற்ற முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், ஆசிரியர் திட்டினால் கூட 14417 உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
பொதுவாக பாலியல் புகாரில் சிக்கும் அலுவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் அவர்கள் சில நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதும், மீண்டும் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று இடைக்கால நிவாரணத்தில் இருக்கும் பொழுது மற்றொரு பள்ளியில் பணியில் சேரக்கூடிய நிலை காணப்படுகின்றது. இதனை முற்றிலும் தவிர்ப்பதற்கும், பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக விதிகளை திருத்தம் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறையில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவலக என 238 பேர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது விசாரணை அதிகாரிகள் விரைந்து விசாரித்து முடிவெடுக்க அமைச்சர் அன்பில் அறிவுறுத்தியுள்ளார். புகார்கள் சிக்கி வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் தவிர்த்து, புகாருக்கு உள்ளானவர்கள் குறித்தும் முழுமையாக விசாரிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பள்ளி மாணவர்கள் மீதான பாலியல் தாக்குதல் முற்றிலும் தடுக்க அதிகபட்ச நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்படலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஒற்றை தலைமை ஏற்றால் தான் வெற்றி பெறுவோம் என கூறினார்கள், எந்த தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றார்கள்? அனைவரும் ஒன்றிணைந்தால் அதிமுகவிற்கு வாழ்வு இல்லையென்றால் தாழ்வு என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முன்னால் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் கைலாசபட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பஞ்சமி நிலத்தை நான் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியானது. முதலில் அது பஞ்சமி நிலம் கிடையாது, அந்த இடத்தை சுப்புராஜ் என்பவரிடன் 2022 ஆம் ஆண்டு வாங்கினேன், அந்த இடம் குறித்து சிலர் புகார் அளித்ததன் அடிப்படையில் ஒரு ஏழு மாதத்தில் மீண்டும் அவரிடமே விற்றுவிட்டேன். எனக்கும் அந்த இடத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தற்போது வரை எனக்கு எந்த ஒரு நோட்டீஸ் -ம் வரவில்லை. 50 ஆண்டு காலம் இரு தலைவர் உருவாக்கியது தான் அதிமுகவே. பைலா 45 விதியின் படி பொதுச்செயலாளர் பதவி திருத்தம் ரத்து செய்யக்கூடாது, தேர்தல் மூலமாக தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுப்பார்கள். அதிமுக விதியை மீறும் வகையில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வை திருத்தம் செய்துள்ளனர். அதிமுக சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்ற உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதை வரவேற்கிறேன்.
அத்திக்கடவு அவிநாசி திட்டம் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு போவது தான் இந்த திட்டம். பம்பிங் செய்து அவிநாசி பகுதிக்கு கொண்டு செல்வதே இந்த திட்டம். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் இந்த கோரிக்கை மோடியிடம் வைத்தார்கள். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தராவிட்டால் நானே செய்து கொடுப்பேன் என ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாக கூறினார். மாநில அரசின் நிதியை கொண்டு இத்திட்டத்திற்கு விதை போட்டவர் ஜெயலலிதா மட்டுமே. இந்த திட்டத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. செங்கோட்டையன் பாராட்டு விழாவை புறக்கணித்ததற்கு அவர்தான் பதில் கூற வேண்டும். அதிமுகவின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் தான். அவர் மீது எனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது. ஜெயலலிதா இருந்தபோது நாடாளுமன்ற தேர்தலின்போது நானும் செங்கோட்டையனும் தான் பணி செய்தோம்.
என்னை தோற்கடிக்க ஒரு ஆளை நிறுத்தினார் ஆர்.பி உதயகுமார். என்ன நடந்தது அதிமுக டெபாசிட் கூட வாங்கவில்லை. அதிமுக டெபாசிட் வாங்காதது எனக்கு வருத்தமாக உள்ளது. அதிமுகவிற்கு கிடைத்த இறையருள் எடப்பாடி பழனிச்சாமி? நான், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் இணைவதற்கு தயாராக உள்ளோம். எனக்கு எந்த ஒரு நிபந்தனையும் இல்லை. அனைவரும் இணைந்தால் அதிமுகவிற்கு வாழ்வு இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு தான் நான் உட்பட… நான் அதிமுகவில் இணைந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தால் தான் நல்லது என்று கூறுவேன்” என்றார்.
தேவர்மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களின் உரிமை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரான இசையமைப்பாளர் இளையராஜாவிடம் ஒரு மணி நேரத்துக்கும் மேல் சாட்சியம் அளித்தார்.
தேவர் மகன், பாண்டியன், பிரம்மா, குணா உள்ளிட்ட 109 படங்களின் இசை வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள மியூசிக் மாஸ்டர் ஆடியோ இசை வெளியீட்டு நிறுவனம், தங்கள் அனுமதியின்றி இந்த படங்களின் பாடல்களை யூ டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி 2010ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்த போது, 1997ம் ஆண்டு பாடல்கள் உரிமை வழங்குவது தொடர்பாக ஒப்பந்தம் செய்த போது, யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களை பற்றி குறிப்பிடவில்லை என்றும், ஆடியோ ரிலீஸ் ஒப்பந்த மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி பி.இளங்கோ முன்பு இளையராஜா ஆஜரானார். அவரிடம் மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். அதற்கு சாட்சி கூண்டில் ஏறி இளையராஜா பதிலளித்தார். அவரிடம் பாடல்களின் பதிப்புரிமை பற்றியும், தயாரிப்பாளர்களிடம் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பாவும், சொத்து மதிப்புகள் தொடர்பாகவும் கேள்விகள் கேட்கபட்டன. குறுக்கு விசாரணையின் போது எத்தனை பங்களாக்கள் உள்ளது என்ற கேள்விக்கு இளையராஜா, எனக்கு முழு ஈடுபாடும் இசையில் உள்ளதால், சொத்து சுகம் என மற்ற பொருட்களை பற்றி எனக்கு தெரியாது என்றும் அதில் கவனம் செலுத்தினால் தனக்கு இசை வராது என்றும் தெரிவித்தார்.
பேர், புகழ் மற்றும் செல்வம் அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது உண்மையா? என்ற கேள்விக்கு,அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது என பதிலளித்தார். சென்னைக்கு எப்போது வந்தீர்கள் என்ற கேள்விக்கு, 1968 ஆம் ஆண்டு வந்ததாகவும், இயக்குனர் பாரதிராஜா அறையில் தங்கி இருந்து வாய்ப்பு தேடியதாகவும்,பின்னர் சங்கிலி முருகன் அறிமுகம் பெற்றதாகவும் தெரிவித்தார். தனது மனைவிக்கு வேறு ஏதாவது தன்னிச்சையாக எந்த வருமானமும் இல்லை என்றும் அவர் எந்த தொழில் செய்யவில்லை என்றும் தெரிவித்தார். தயாரிப்பாளரிடம் நேரடியாக பணம் வாங்குவீர்களா என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவித்தார். தனக்கு இசை மூலம் மட்டும் வருமானம் வேணடும், வேறு எந்த தொழிலும் கிடையாது என்றும் குறிப்பிட்டார்.இளையராஜாவிடம் ஒரு மணி நேரம் நடந்த சாட்சி விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து, நீதிபதி, மீண்டும் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி உத்தரவிட்டார்.
இந்த வேலன்டைன்ஸ் டே அன்று பிரபோஸ் பண்ணும் ஐடியாவில் இருக்கிறீர்களா… உங்களுக்குக் கட்டம் என்ன சொல்லுது? பிரபோஸ் பண்ணலாமா வேண்டாமா… இந்த ஆண்டு காதல் கைகூடுமா? கல்யாணத்தைத் திட்டமிடலாமா என்று பலரும் யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா… இதோ உங்களுக்கான ஜோதிட வழிகாட்டல்.
பொதுவாக ஒருவருக்குக் காதல் கைகூட வேண்டும் என்றால் அவரின் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் நல்ல நிலையில் அமைந்திருக்க வேண்டும். தற்போது கோசாரப்படி சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெற்று ராகுவோடு சேர்ந்து சஞ்சரிக்கிறார். குருபகவான் ரிஷபராசியில் சஞ்சரிக்கிறார். மேலும் இந்த ஆண்டில் சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகியனவும் நடைபெற உள்ளன. இந்த கிரக மாற்றங்கள் உங்கள் காதல் வாழ்க்கைக்கு சாதகமா என்பதை ஜோதிடர் பாரதி ஶ்ரீதரிடம் கேட்டோம்.
மிதுனம் : மிதுனத்துக்கு 5 – ம் வீட்டுக்கும் 12- ம் வீட்டுக்கும் உரியவர் சுக்கிரன். அவர் ராகுவோடு சேர்ந்து 10- ல் இருப்பது காதலுக்கு உகந்த கிரக நிலவரம் அல்ல என்றே சொல்லலாம். அதற்காகக் காதல் கைகூடாதா என்றால் கூடும். கொஞ்சம் பொறுமை அவசியம். இந்த வேலன்டைன்ஸ் டேயில் காதலைச் சொல்வதைச் சிறிது தள்ளிப்போடுவதும் நல்லது. ஆகஸ்ட் மாதத்துப்பின் கிரக நிலவரங்கள் சாதகமாகின்றன. ராசியில் அப்போது குருவும் சஞ்சரிப்பார். அந்தக் காலகட்டம், காதலைச் சொல்லவோ ஏற்கவோ காதல் திருமணம் செய்யவோ மிகவும் உகந்தது.
பெரியாரைப் பற்றி தரக்குறைவாக பேசுவதற்கு எந்த அரசியல்வாதிக்கும் தகுதி இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி தெற்கு மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செயல் வீரர்களின் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் தேனி தெற்கு மாவட்ட நிர்வாகிகள், கம்பம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள், சார்பணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “2026 தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக ஒன்றிணைய வாய்ப்புள்ளது. அது With or Without எடப்பாடி பழனிசாமி என்பதை அதிமுக தொண்டர்கள் முடிவு செய்வார்கள். திருப்பரங்குன்றத்தை பிரச்சனையில் மாவட்ட ஆட்சித் தலைவர், அமைச்சர்கள் என அனைவரும் தலையிட்டு சுமுகமான தீர்வை கொண்டு வந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் சகோதரர் நோக்கத்துடன் பழகும் இந்து முஸ்லீம்களிடம் பிரச்சனைகளை திமுக அரசு தான் ஏற்படுத்தி உள்ளது. மேலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியினர் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். அதற்கு தேர்தல் ஆணையம் சின்னம் பற்றிய விசாரணையில் தலையிடலாம் என தீர்ப்பு அளிக்கப்பட்டதற்கு இது எங்களின் வெற்றிக்கு முதல் தொடக்கம். இந்த உலகத்தில் அம்மா மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நிகராக யாருமே கிடையாது என்றார்.
இதனை எடுத்து அத்திக்கடவு நிகழ்ச்சியை செங்கோட்டையன் புறக்கணித்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு வித்திட்டவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இந்த விஷயத்தில் செங்கோட்டையன் அவர்கள் எடுத்திருப்பது அம்மாவின் விசுவாசிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு விஷயமாகும். தந்தை பெரியாரை பற்றி பேசுவதற்கு எந்த ஒரு அரசியல்வாதிக்கும் அருகதை கிடையாது. தங்களுடைய சுய விளம்பரத்திற்காக ஒரு சிலர் அவரைப் பற்றி அவதூறுகளாக பேசி வருகிறார்கள்” என்று கூறினார்.
இந்த வேலன்டைன்ஸ் டே அன்று பிரபோஸ் பண்ணும் ஐடியாவில் இருக்கிறீர்களா… உங்களுக்குக் கட்டம் என்ன சொல்லுது? பிரபோஸ் பண்ணலாமா வேண்டாமா… இந்த ஆண்டு காதல் கைகூடுமா? கல்யாணத்தைத் திட்டமிடலாமா என்று பலரும் யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா… இதோ உங்களுக்கான ஜோதிட வழிகாட்டல்.
பொதுவாக ஒருவருக்குக் காதல் கைகூட வேண்டும் என்றால் அவரின் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் நல்ல நிலையில் அமைந்திருக்க வேண்டும். தற்போது கோசாரப்படி சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெற்று ராகுவோடு சேர்ந்து சஞ்சரிக்கிறார். குருபகவான் ரிஷபராசியில் சஞ்சரிக்கிறார். மேலும் இந்த ஆண்டில் சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகியனவும் நடைபெற உள்ளன. இந்த கிரக மாற்றங்கள் உங்கள் காதல் வாழ்க்கைக்கு சாதகமா என்பதை ஜோதிடர் பாரதி ஶ்ரீதரிடம் கேட்டோம்.
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு : ரிஷப ராசிக்கு ராசி அதிபதியே சுக்கிரன்தான். மேலும் ஆறாம் வீட்டு அதிபதியும் அவரே. அவர் ராசிக்கு 11- ம் வீட்டில் சஞ்சரிப்பது மிகுந்த சாதகமான காலமாகும். மேலும் இந்த ஆண்டு நிகழும் அனைத்துப் பெயர்ச்சிகளும் சாதகமாக இருக்கக் கூடியது ரிஷப ராசிக்குதான். இப்படிப்பட்ட ரிஷப ராசிக்கு வரும் பிப்ரவரி 14 -ம் தேதி சந்திரன் 4 -்ல் சஞ்சரிக்கிறார். எனவே துணிந்து காதலைச் சொல்லலாம் நிச்சயம் கைகூடும். திருமணத்திலும் முடியும்.
சாதிவாரி கணக்கெடுப்புக்காக பா.ம.க.வின் போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர், சமூகநீதியைக் காக்க துணை நிற்பீர் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், “சென்னையில் கடந்த புதன்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நீங்கள்,‘‘இப்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து பேசும் அன்புமணி இராமதாஸ், 4 ஆண்டுகளுக்கு முன்பு வன்னியருக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட போது, எந்த அடிப்படையில் இந்த இட ஒதுக்கீட்டை வழங்குகிறீர்கள். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அதன் அடிப்படையில் கொடுங்கள் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டிருக்க வேண்டாமா?’’ என்று வினா எழுப்பியிருக்கிறீர்கள். உங்களின் நேர்காணலைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காக்க வேண்டும் என்ற உன்னத நோக்குடன் 45 ஆண்டுகளாக மருத்துவர் அய்யா அவர்கள் பாடுபட்டு வரும் நிலையில், அதை அங்கீகரிக்காமல், சாதிவாரி கணக்கெடுப்புக்கான எனது கோரிக்கையை அரசியல் என்று நீங்கள் கொச்சைப்படுத்துவதற்கு புரிதல் இல்லாமை தான் காரணம். அது குறித்து உங்களுக்கு விளக்குவதற்காகத் தான் இந்தக் கடிதம்.
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி இன்றோ, நேற்றோ எழுப்பவில்லை. 1980-ஆம் ஆண்டில் மருத்துவர் அய்யா அவர்கள் வன்னியர் சங்கத்தை தொடங்கிய நாளில் இருந்தே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாளில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே தமிழ்நாட்டில் அனைத்து சாதியினருக்கும், அவரவர் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்றால் என்னவென்றே பலருக்கும் தெரியாத சூழலிலேயே இந்தக் கோரிக்கையை அய்யா முன்வைத்தார்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பயணம் மிகவும் நீண்டது. 1980-ஆம் ஆண்டில், சாதிவாரி மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய மருத்துவர் அய்யா அவர்கள், அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தான் தமிழ்நாடு முழுவதும் மாநாடு, பரப்புரை பயணம், உண்ணாவிரதம், பட்டை நாமப் போராட்டம் உள்ளிட்ட எண்ணற்ற வடிவங்களில் போராட்டங்களை நடத்தினார்கள். அதன் உச்சமாகத் தான் ஒரு நாள் சாலை மறியல் போராட்டம், ஒரு நாள் ரயில் மறியல் போராட்டம் ஆகியவற்றை நடத்தி 1987-ஆம் ஆண்டில் ஒரு வார சாலைமறியல் போராட்டத்தை நடத்தினார். அந்தப் போராட்டத்தின் போது தான் 21 சொந்தங்கள் துப்பாக்கியால் சுடப்பட்டும், தடியால் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டனர் என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி சமூகநீதியைக் காக்க வேண்டும் என்பதற்காக மருத்துவர் அய்யா அவர்களும், பாட்டாளி மக்கள் கட்சியும் செய்த தியாகங்களும், அனுபவித்த கொடுமைகளும் ஏராளம்.
1985-ஆம் ஆண்டில் தொடங்கி 1989-ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்த இராஜிவ் காந்தி அவர்களை மருத்துவர் அய்யா அவர்கள் சந்தித்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பல கட்ட வலியுறுத்தலுக்குப் பிறகு மருத்துவர் அய்யா அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இராஜிவ் காந்தி அவர்கள், அது குறித்து மருத்துவர் அய்யா அவர்களுடன் பேச்சு நடத்துவதற்காக மத்திய அமைச்சர்கள் சிலரை நியமித்தார். முதலில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த நரசிம்மராவ் அவர்களும், பின்னர் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த பூட்டாசிங் அவர்களும் மருத்துவர் அய்யா அவர்களுடன் பேச்சு நடத்தினார்கள். ஒரு கட்டத்தில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் அவர்களையும் மருத்துவர் அய்யா அவர்கள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்காகவும், சமுகநீதிக்காகவும் கோரிக்கை விடுத்தார். அவர்களில் எவருமே மருத்துவர் அய்யா அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை மறுக்கவில்லை. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஏற்பாடு செய்வதாகவே அவர்கள் அனைவரும் உறுதியளித்தனர்.
1988-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, சக்தி வாய்ந்த ஆளுனராக பி.சி.அலெக்சாண்டர் திகழ்ந்தார். அவரையும் மருத்துவர் அய்யா அவர்கள் பலமுறை சந்தித்து தமது கோரிக்கையை வலியுறுத்தினார். அதன் தொடர்ச்சியாகத் தான் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்காக இ.ஆ.ப. அதிகாரி வெங்கடகிருட்டினன் தலைமையில் ஆணையம் அமைத்து 1988-ஆம் ஆண்டு திசம்பர் 12-ஆம் தேதி அலெக்சாண்டர் ஆணையிட்டார். ஆனால், 1989-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த உடன் அந்த ஆணையத்தை கலைஞர் கலைத்து விட்டார்.
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு செல்லும் என்று 13.07.2010&ஆம் நாள் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதை இறுதி செய்யும்படி ஆணையிட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து சமுதாயத் தலைவர்களுடன் முதலமைச்சர் கலைஞரை சந்தித்த மருத்துவர் அய்யா அவர்கள், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதைக் கேட்டு கண்டிப்பாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக வாக்குறுதி அளித்த கலைஞர், அவர் பதவி விலகும் வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
2011-ஆம் ஆண்டில் முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்த ஜெயலலிதா அவர்களுக்கு முற்றிலும் எதிரான அரசியல் நிலைப்பாட்டை பா.ம.க. எடுத்திருந்தாலும் கூட, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்; அதனடிப்படையில் தமிழ்நாட்டில் 69% இடஓதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு மருத்துவர் அய்யா கடிதம் எழுதினார்.
அதன்பிறகும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான முயற்சிகளையும், போராட்டங்களையும் மருத்துவர் அய்யா அவர்கள் கைவிடவில்லை. 2019-ஆம் ஆண்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாட்டாளி மக்கள் கட்சி விதித்த 10 நிபந்தனைகளில் முதன்மையானது தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தான். அதன்பின் மருத்துவர் அய்யா அவர்களும், நானும் குறைந்தது 6 முறை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதன் காரணமாகவும், அதன்பின் நாங்கள் நடத்திய போராட்டத்தின் பயனாகவும் தான் 2020&ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக நீதியரசர் குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீதியரசர் குலசேகரன் ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்படாததால் அது முற்றிலுமாக செயலிழந்து போனது.
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்காக கடந்த சில ஆண்டுகளில் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையிலும், எனது தலைமையிலும் நடத்தப்பட்ட போராட்டங்கள், கருத்தரங்குகள் ஆகியவற்றின் எண்ணிக்கை பத்துக்கும் மேல் இருக்கும் என்பதையும் நீங்கள் அறிய வேண்டும்.
தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று 2000-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவர்களையும், உள்துறை அமைச்சர் அத்வானி அவர்களையும் மருத்துவர் அய்யா அவர்கள் நேரில் சந்தித்து 2001&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தியதை இருவரும் ஏற்றுக் கொண்டனர். அதற்கான ஆணை பிறப்பிக்கப்படவிருந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்க மீட்புப் பணிகளை பார்வையிடுவதில் அத்வானி தீவிரமாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதிருந்த மத்திய அரசு அதிகாரிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை தடுத்து நிறுத்திவிட்டார்கள்.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பையாவது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்திவிட வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி தீவிரமாக இருந்தது. இதற்காக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 140 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டிய நான், 2008-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை நேரில் சந்தித்து 140 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்திடப்பட்ட மனுவை அளித்தேன். பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை பரிசீலிப்பதாக சிவராஜ் பாட்டீல் அவர்களும் அப்போது ஒப்புக்கொண்டார்.
அதன்பின்னர் மக்களவையில் இதுகுறித்து பிரச்சினை எழுப்பப்பட்ட போது லாலு பிரசாத், சரத்யாதவ், முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவளித்தனர். அதைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த அரசு ஒப்புக் கொண்டது. மக்களவையில் இதுகுறித்த வாக்குறுதியை 2009-10 ஆம் ஆண்டில் அப்போதைய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி அளித்தார்.ஆனால், அவ்வாறு செய்யாமல் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு என்ற பெயரில் எதற்கும் உதவாத சடங்கு ஒன்றை அப்போதைய மத்திய அரசு நடத்தி மக்களை ஏமாற்றியது.
2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்பதற்காக கடந்த 6 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. 2019-ஆம் ஆண்டில் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்ற சில மாதங்களில் 10.10.2019-ஆம் நாள் அவரை தில்லியில் சந்தித்த மருத்துவர் அய்யா அவர்களும், நானும் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் எனக் கோரினோம்.
அதன்பின், 03.02.2020, 28.08.2021, 24.09.2024 ஆகிய நாட்களில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு மருத்துவர் அய்யா அவர்கள் கடிதம் எழுதினார் என்பதை தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
மன்மோகன்சிங் அவர்களின் ஆட்சிக்காலத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் வலியுறுத்தலை ஏற்று மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கிய கட்சி என்ற முறையில் அதன் மீது எனக்கு மதிப்பு உண்டு. அதேபோல், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2022-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இருந்து சாதகமான பதிலைப் பெற்றவர் என்ற அடிப்படையில் உங்கள் மீதும் எனக்கு மதிப்பு உண்டு.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்காக மருத்துவர் அய்யா அவர்களும், நானும் பாட்டாளி மக்கள் கட்சியும் எண்ணிலடங்காத பணிகளை செய்திருக்கும் நிலையில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக பாட்டாளி மக்கள் கட்சி என்ன செய்தது? இந்த விவகாரத்தில் அன்புமணி இராமதாஸ் அரசியல் செய்கிறார் என்று நீங்கள் கூறுவதெல்லாம் பா.ம.க.வின் உன்னதமான சமூகநீதி பணிகளை கொச்சைப்படுத்துவது ஆகும். இந்தக் கடிதத்தைப் படித்த பிறகாவது சாதிவாரி கணக்கெடுப்புக்காக பா.ம.க செய்த பணிகளை நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
தேசிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும்; மாநிலங்களில் மாநில அரசுகள் 2008-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிப்புச் சட்டத்தின்படி சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மனநிலையும் இத்தகையதாகவே இருக்கிறது. இதற்காகத் தான் காங்கிரஸ் மூத்த தலைவர் இராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான ஒற்றுமையை புரிந்து கொண்டு தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்; பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை மிகவும் நியாயமானது என்பதால் அதை ஏற்று தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை நீங்கள் கண்டிப்பாக செய்வீர்கள். தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொள்ளும் உன்னத முயற்சிக்கு துணை நிற்பீர்கள் என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேலன்டைன்ஸ் டே அன்று பிரபோஸ் பண்ணும் ஐடியாவில் இருக்கிறீர்களா… உங்களுக்குக் கட்டம் என்ன சொல்லுது? பிரபோஸ் பண்ணலாமா வேண்டாமா… இந்த ஆண்டு காதல் கைகூடுமா? கல்யாணத்தைத் திட்டமிடலாமா என்று பலரும் யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா… இதோ உங்களுக்கான ஜோதிட வழிகாட்டல்.
பொதுவாக ஒருவருக்குக் காதல் கைகூட வேண்டும் என்றால் அவரின் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் நல்ல நிலையில் அமைந்திருக்க வேண்டும். தற்போது கோசாரப்படி சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெற்று ராகுவோடு சேர்ந்து சஞ்சரிக்கிறார். குருபகவான் ரிஷபராசியில் சஞ்சரிக்கிறார். மேலும் இந்த ஆண்டில் சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகியனவும் நடைபெற உள்ளன. இந்த கிரக மாற்றங்கள் உங்கள் காதல் வாழ்க்கைக்கு சாதகமா என்பதை ஜோதிடர் பாரதி ஶ்ரீதரிடம் கேட்டோம்.
மேஷம் ராசிக்காரர்களுக்கு: மேஷராசிக்கு சுக்கிரன் குடும்ப ஸ்தானத்துக்கும் களத்திர ஸ்தானத்துக்கும் உரியவர். எனவே இயல்பாகவே காதல் திருமணம் நிகழ வாய்ப்பிருக்கும் ராசிக்காரர்கள் இவர்கள். இவர்களுக்குத் தற்போது சுக்கிரன் 12 – ல் ராகுவுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்கிறார். இந்த வேலன்டைன்ஸ் டேக்கு காதலிக்கு விலை அதிகம் உள்ள கிப்ட் வாங்கிக்கொடுக்கத் திட்டமிட்டிருப்பீர்கள். அந்த வகையில் செலவு அதிகரிக்கதான் செய்யும். மற்றபடி இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏழரை சனி தொடங்க இருக்கிறது. அதற்குப் பின் காதல் விஷயங்களில் நிறைய கவனம் தேவை. எனவே இந்த பிப்ரவரி 14 -ல் காதலைச் சொல்லத் திட்டமிட்டிருந்தால் தயங்காமல் சொல்லிவிடுங்கள். வெற்றியடைய வாய்ப்பு உண்டு.